search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Love married woman"

    • கிருத்திகா வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தின்று விட்டார்.
    • சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கரியானூர், காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த சந்திரமதி என்பவரின் மகள் கிருத்திகா (20). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன் ஈரோடு மாணிக்கம்பாளை யம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை காதலித்து திரும ணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையுள்ளது.

    கடந்த சில நாள்களாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு கார ணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போது பெற்றோர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

    இந்தநிலையில் சம்பவ த்தன்று கணவன், மனைவி க்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் கிருத்திகா வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார். உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சை க்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திரும ணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்ப ட்டுள்ளது.

    ×