search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry collided"

    • சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த தென்மலையை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் வைரமுத்து(வயது 33).
    • கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக வைரமுத்துவின் மொபட் மீது மோதியது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த தென்மலையை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் வைரமுத்து(வயது 33).

    இவர் நேற்று சங்கரன்கோவில்-ராஜபா ளையம் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக வைரமுத்துவின் மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட வைரமுத்து தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வைரமுத்து உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான ஆலங் குளம் அருகே உள்ள ஊத்துமலையை சேர்ந்த ஜெயக்குமார்(45) என்பவ ரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×