என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lorry bike crash"
ஈரோடு:
ஈரோடு ரங்கம் பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது45). இவர் ஈரோடு பெரிய மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் சேகர் வேலையை முடித்து விட்டு தனது மொபட்டில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் பார்சல் லாரி ஒன்று வந்து கொண்ருந்தது. காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த லாரியை நத்தக்காடையூரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் முன்னால் மொபட்டில் சென்று கொண்டிருந்த சேகர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
அதே சமயம் பின்னால் வந்த பார்சல் லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இந்த வேகத்தில் மொபட்டும் லாரியும் ரோட்டின் மத்தியில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
அப்போது மொபட்டின் பெட்ரோல் டேங்க் உடைத்து மொபட் தீ பிடித்தது. இதில் சேகரின் இடுப்பு பகுதி மற்றும் கால்களில் தீ பிடித்தது. இதனால் அவர் வலி தாங்க குடியாமல் அலறினார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். சேகரின் உடலில் பிடித்த தீயை அனைத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்