search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lord Brammah"

    • பிரம்மதேவன் தலையைக் கண்டு வர மேல்நோக்கி செல்கிறார்.
    • எந்த மிருகமும் கிடைக்காததால் இரவு அங்கு காத்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    சிவராத்திரி கதைகள்

    பாற்கடலை கடையும் போது சிவன் உண்ட நஞ்சில் இருந்து அவர் பிழைப்பதற்காக பக்தர்கள் எல்லாம் இரவு முழுவதும் கண் துஞ்சாது இருந்து சிவனை வேண்டியதால் அது சிவராத்திரி நாளாகக் கொண்டாடப்படுகிறது என்பது புராணக்கதை.

    பிரம்ம தேவனுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையில் ஏற்பட்ட வழக்கு, இருவரில் உலகைப் படைத்தவர் யார், யார் பெரியவர் என்ற சர்ச்சைக்கு உள்ளாக்கியது.

    இந்த சூழ்நிலையில் சிவன் விஸ்வரூபத்தில் தோன்றி நீங்கள் இருவருள் யார் எனது பாதத்தையும், கேசத்தையும் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று கூறவே,

    பிரம்மதேவன் அன்னவடிவம் மேற்கொண்டு தலையைக் கண்டு வர மேல்நோக்கி செல்கிறார்.

    மகாவிஷ்ணு பன்றி உருவமெடுத்துத் தரையைத் தோண்டி பாதங்களைக் கண்டுவர செல்கிறார்.

    இருவருடைய முயற்சியும் வீணாகவே, பிரம்மா சிவனின் தலையைக் கண்டதாகவும், தலையில் தாழம்பூவைப் பார்த்ததாகவும் ஒரு பொய் புகல்கின்றார்.

    சிவனுக்கு ஏற்பட்ட கோபத்தின் காரணமாகப் பிரம்ம தேவனுக்குப் பூவுலகில் கோவில் இல்லாமலும் பொய் சாட்சி சொன்ன தாழம்பூவை பூஜைக்கு உபயோகம் இல்லாமலும் போகட்டும் என்று சபித்து விடுகிறார்.

    இதனால் சிவனை முழுமுதற் கடவுளாக மக்கள் ஏற்றுச் சிவராத்திரி அன்று இரவு பகலாக கண் துஞ்சாது வணங்குவதாக மற்றொரு ஐதீகம்.

    சிவபுராணம் சிவராத்திரிக்கு சிறுகதைகளை கூறுகிறது.

    குருத்துர்வன் என்னும் வேட்டுவ வகுப்பைச் சார்ந்தவன், காட்டுக்கு வேட்டைக்குச் செல்கிறான்.

    எந்த மிருகமும் கிடைக்காததால் இரவு வரை அங்கு காத்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    விழித்து இருப்பதற்காக வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கீழே இருக்கும் சிவலிங்கத்தைப் பார்க்காமல் போட்டுக் கொண்டே இருக்கிறான்.

    வேட்டுவச் சிறுவன் வில்வ இலை கொண்டு இரவு முழுவதும் சிவனுக்கு பூஜை செய்ததால் அத்தினம் தான் சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது என்பது இன்னு மொரு ஐதீகம்.

    ×