என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "long distance running"

    • மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நெடுந்தூர ஓட்டப்போட்டி இன்று காலை நடைபெற்றது.
    • 25 வயதிற்குட்பட்டோருக்கு 8 கிலோமீட்டர்தூரமும், 25 வயது மேற்பட்டோருக்கு 10 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்றது.

    சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நெடுந்தூர ஓட்டப்போட்டி இன்று காலை நடைபெற்றது.

    2 பிரிவில் போட்டிகள்

    இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆண்களுக்கான பிரிவில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டோருக்கு 8 கிலோமீட்டர்தூரமும், 25 வயது மேற்பட்டோருக்கு 10 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்றது.

    மேலும், பெண்களுக்கான பிரிவில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், 25 வயது மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் என நான்கு பிரிவுகளில் இப்போட்டியானது நடைபெற்றது.

    ரொக்கப்பரிசு

    இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 5,000-மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 3,000-மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 2,000-மு ம்வழங்கப்பட்டது.

    மேலும், 4 முதல் 10 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு ரூபாய் 1,000- மும் வழங்கப்பட்டது. இதனை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×