search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lok sabha 2019"

    உத்தரபிரதேச மாநிலத்தில் 20 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #PMModi
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில், முதல் கட்டமாக 8 தொகுதிகளில் அடுத்த மாதம் ஏப்ரல் 11-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார். இதுபற்றி பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “பிரதமர் மோடி தன் முதல் பிரசார கூட்டத்தை எந்த இடத்தில், எப்போது தொடங்குவார் என்பது முடிவாகவில்லை, ஆனால் பெரும்பாலும் சகரான்பூரில் உள்ள ஷங்கம்பூரி தேவி கோவிலில் தரிசனம் செய்த பிறகு தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார். தற்காலிக திட்டப்படி உத்தர பிரதேச மாநிலத்தில் 20 பிரசார கூட்டங்களில் பேசுவார்” என்று தெரிவித்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலிலும் பிரதமர் மோடி 12 பிரசார கூட்டங்களில் பேசுவார் என்றே முதலில் முடிவு எடுக்கப்பட்டது, பின் அவர் 21 கூட்டங்களில் உரையாற்றினார்.
    பாராளுமன்ற தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களின் புகைப்படமும் அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. #LokSabha #EVM #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், குறிப்பிட்ட தொகுதிகளில் களத்தில் இருக்கும் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் சின்னங்கள் மட்டுமே பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த நடவடிக்கையால் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே பெயரில் இருந்தால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.



    எனவே இதை தவிர்க்கும் வகையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன், அவர்களின் புகைப்படமும் அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளிலும் வேட்பாளர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருக்கும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

    இதற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், சமீபத்தில் எடுத்துக்கொண்ட தபால் தலை அளவிலான புகைப்படத்தை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
    ×