search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lock of the house"

    • வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பீரோ உடை க்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது தெரிய வந்தது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள நசியனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவரின் உறவினர் வீடு அந்த பகுதியில் உள்ளது.

    கணேசனின் உறவினர் வீட்டை பூட்டி விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று விட்டார். வீடு கடந்த 2 மாதங்களாகவே பூட்டிய நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் கணேசன் அந்த வீட்டுக்குச் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடை க்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கணேசன் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    ×