search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "local body by-elections"

    • மேலப்புலியூர் தலைவர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியம், வி.களத்தூர் கிராம ஊராட்சி 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆலத்தூர் ஒன்றியம், பிலிமிசை ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், என மொத்தம் 3 பதவியிடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டனர்.
    • நேற்று (9ம்தேதி) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடந்தது. ஓட்டுப்பதிவுகள் எந்தவித அசாம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடந்தது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகளுக்கான தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது.

    பெரம்பலூர் ஒன்றியம், மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர், ஆலத்தூர் ஒன்றியம், இரூர் கிராம ஊராட்சி வார்டு எண்- 1 மற்றும் பிலிமிசை கிராம ஊராட்சி வார்டு எண்- 4, வேப்பந்தட்டை ஒன்றியம் வி.களத்தூர் கிராம ஊராட்சி வார்டு எண்- 7, வேப்பூர் ஒன்றியம் கீழப்புலியூர் கிராம ஊராட்சி வார்டு எண்- 8 என மொத்தம் ஒரு கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

    இதில் வேப்பூர் ஒன்றியம், கீழப்புலியூர் ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர் பதவி ஜெகவள்ளியும், இரூர் ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மணி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள மேலப்புலியூர் தலைவர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியம், வி.களத்தூர் கிராம ஊராட்சி 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆலத்தூர் ஒன்றியம், பிலிமிசை ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், என மொத்தம் 3 பதவியிடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டனர்.

    இந்த தேர்லில் மொத்தம் 5 ஆயிரத்து 592 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 11 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    நேற்று (9ம்தேதி) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடந்தது. ஓட்டுப்பதிவுகள் எந்தவித அசாம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடந்தது.

    இதில் மேலப்பூலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் ஆயிரத்து 604 ஆண்களும், ஆயிரத்து 908 பெண்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 512 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது 71.87 சதவீதமாகும். அதே போல் பிலிமிசை ஊராட்சி 1 வது உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 76 ஆண்களும், 108 பெண்களும் என மொத்தம் 183 பேர் ஓட்டு போட்டுள்ளனர். இது 84.32 சதவீதமாகும். வி.களத்தூர் 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 86 ஆண்களும், 152 பெண்களும் என மொத்தம் 238 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது 64 சதவீதமாகும்.தேர்தல் பணியில் 44 அரசு அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 120 போலீசாரும் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டிருந்தனர்.

    ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஓட்டு பெட்டிகள் வைக்கும் அறையில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டு அறை கதவு மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

    வரும் 12ம்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. வரும் 14ம்தேதியுடன் தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் வரும் 15ம் தேதி பதவி ஏற்கவுள்ளனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மற்றும் 7 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 8 காலி இடங்களுக்கு இன்று தேர்தல் நடை பெறும் என அறிவிக்கப்ப ட்டது.
    • வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கை செலுத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை வரை நடைபெறுகிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பதவி களில் ஒரு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மற்றும் 7 கிராம ஊராட்சி உறுப்பி னர் பதவிகள் என மொத்தம் 8 காலி இடங்க ளுக்கு இன்று தேர்தல் நடை பெறும் என அறிவிக்கப்ப ட்டது.

    இதில் முன்னிலை க்கோட்டை, சிவஞானபுரம், மட்டப்பா றை, ஐ.வாடிப்பட்டி, தும்மலப்பட்டி, குளத்துப்பட்டி ஆகிய 6 கிராம ஊராட்சிகளில் தலா ஒரு பதவிக்கும், ஒட்ட ன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ட்பட்ட 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தலா ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்ததால் அவர்கள் 7 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திம்மணநல்லூர் ஊராட்சி 2வது வார்டு உறுப்பினராக இருந்த ராமச்சந்திரன் (வயது55). இறந்து விட்டதால் இந்த வார்டுக்கு இடை த்தேர்தல் நடை பெற்றது. இந்த வார்டில் 288 ஆண்கள், 303 பெண்கள் என மொத்தம் 591 வாக்காளர்கள் உள்ளனர்.

    2 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டனர். தேர்தல் அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா, உதவி அலுவலர்கள் சரோஜினி, சரவணன் ஆகியோர் செயல்பட்டனர்.

    பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மணியக்காரன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த வாக்குப்பதிவில் காலை முதலே வாக்கா ளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கை செலுத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை வரை நடைபெறுகிறது.

    ×