search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "llicit Liquor"

    • இளைய நம்பிக்கு சொந்தமான கெமிக்கல் ஆலை வானரகத்தில் செயல்பட்டு வந்துள்ளது.
    • ஏழுமலை அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள்.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 11 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாராய வியாபாரிகள் 11 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான போலீசார் சாராய வியாபாரிகள் 11 பேரிடமும் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.

    மெத்தனால் எங்கிருந்து வந்தது. எந்தெந்த சாராய வியாபாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியான சென்னை திருவேற்காட்டை சேர்ந்த இளைய நம்பிக்கு சொந்தமான கெமிக்கல் ஆலை வானரகத்தில் செயல்பட்டு வந்துள்ளது. நஷ்டத்தில் இயங்கிய ஆலை மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து தான் 1,250 லிட்டர் மெத்தனாலை புதுச்சேரியை சேர்ந்த இளைய நம்பி நண்பர் ஏழுமலைக்கு ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.

    ஏழுமலை அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இன்று மாலையுடன் 11 பேரின் காவலும் முடிவடைகிறது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    ×