என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Legislative Committee Study"

    • சட்டமன்ற குழு அறிவுறுத்தல்
    • படகு குழாமில் ஆய்வு செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலை மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெறும் பல்வேறு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, சுகாதார துறை மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளின் செயல்பாடுகளையும் வளர்ச்சி திட்ட பணிகளையும் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் ‌ செல்வபெருந்தகை தலைமையிலான குழு உறுப்பினர்கள் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் பிரகாஷ், ராஜா, வேல்முருகன், உள்ளிட்ட18 பேர் அடங்கிய குழுவினர் ஏலகிரி மலை மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெற்ற வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

    மேலும் ஜோலார்பே ட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலை ஊராட்சி அத்தனாவூர் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தில் நடைபெற்று வரும் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும், அத்தனாவூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஓரடுக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்து சாலை பணிகள் தரமானதாக இருக்கிறதா என்பதை அளவீடு செய்து பார்வையிட்டனர்.

    மேலும், ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூர் கிராமத்தில் பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்ள்ளியில் பயிலும் மாணவர்களிடம் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் கலந்துரையாடி விடுதியில் உணவுகள் தரமாக வழங்கப்படுகிறதா என மாணவர்களிடம் கேட்டறிந்து, மின்சாரம் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, தமிழக அரசு வழங்கும் அனைத்து திட்டங்களையும், அனைத்து கல்வி உதவிகளையும் பெற்று மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயின்று தேர்வில் வெற்றியடைய வேண்டுமென மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்

    மேலும், அதேபகுதியில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் மாணவ, மாணவியர் விடுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், அத்தனாவூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அமைக்கப்பட்டு தனிநபர் கிணற்றையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் ரூ.17.80 இலட்சம் மதிப்பீட்டில் என்பவர் அரசின் மானியம் ரூ.8.90 இலட்சம் மானியமாக பெற்று 50 சென்ட் நிலத்தில் கொய்மலர், ரோஜா சாகுபாடி பசுமை குடில் அமைத்து, வளர்க்கப்பட்டு வரும் ரோஜா தோட்டத்தை பார்வையிட்டு, ரோஜா சாகுபடி செய்யும் விதம் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, ஏலகிரிமலை படகு இல்லத்தை குழுவினர் பார்வையிட்டு நவீனபடகு குளத்தை சீரமைத்து வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் வகையிலும், பயணிகள் பாதுகாப்பான முறையில் படகு சவாரி செய்யவும், அந்நிய செலாவனியை ஈட்டும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், படகு இல்லம் அருகிலுள்ள பழைய கழிவறையை அகற்றி நவீன கழிவறை அமைக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைவழங்கினர்.

    மேலும் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கிராமத்தில் வேளாண்மை -உழவர் நலத் துறையின்சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மழைத்தூவானை பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கலந்துரையாடினார்கள்.

    தொடர்ந்து, ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு, மருந்துகள் இருப்பு, நோயாளிகளின் வருகை பதிவேடு, சிகிச்சை முறைகள் குறித்தும், கேட்டறிந்து, மருந்து இருப்புகள் குறித்த பதிவேடு முறையாக பராமரிக்காததை குறித்து இணை இயக்குநர் அவர்கள் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டார்.

    உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இரா.வில்சன் இராசசேகர், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவர்கள் தினகரன், முருகேசன். ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ், கே.சதிஷ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மின்தடை நேரத்திலும் அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட அறிவுறுத்தல்
    • நிலுவை பணிகள் குறித்து கேட்டறிந்தனர்

    வாலாஜா:

    வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, அமைச்சர் ஆர்.காந்தி, தமிழ்நாடு சட்டபேரவை பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் தணிக்கைத் துறை தலைவரால் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வுமான செல்வபெருந்தகை தலைமையிலான குழு உறுப்பினர்கள் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேரடி கள ஆய்வு மேற்கொண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நிலுவை பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    அதன்படி இந்த ஆய்வில் வாலாஜா அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவினை ஆய்வு செய்தனர்.அப்போது நீரிழிவு, கர்ப்பப்பை நோய்கள், மலட்டுத்தன்மை, நாள்பட்ட தோல் நோய்கள், மூட்டு வலி, மூலம் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கருவுற்ற தாய்மார்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு உள்ள நபர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டு மூலிகை பற்றிய பயன்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கப்படுகிறது என சித்த மருத்துவர் பொது கணக்கு குழுவினருக்கு தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் நேரடியாக சென்று நோயாளிகளிடம் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான குழு கேட்டறிந்தனர். அப்போது மருத்துவமனையில் மின்தடையின் போது தானாக ஜெனரேட்டர் இயங்கும் வகையில் இல்லாததை பார்த்து அவசர சிகிச்சை நோயாளிகள் இந்நேரங்களில் பிரச்சனைக்குள்ளாக மாட்டார்களா என கேள்வி எழுப்பினர்.

    மின்சாரம் இல்லாத நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் எந்த ஒரு மானிடரும், விளக்குகளும் வேலை செய்யவில்லை. இந்த சூழல் நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாகும். நோயாளிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு மருத்துவத்துறை செயலாளரை அழைத்து விசாரிக்க உள்ளோம்.

    எவ்வாறு தடையில்லா சான்று அளித்தார்கள்.இந்த ஏற்பாட்டினை சரியாக செய்திடாத பொதுப்பணித்துறை செயலாளரையும் அழைத்து விசாரிக்க உள்ளோம் என தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.

    இந்த குறையை உடனடியாக சரி செய்திட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் உத்தரவிட்டார்.இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குகுழு உறுப்பினர்களான காட்டுமன்னார் கோயில் எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், பாபநாசம் எம்.எல்.ஏ. முனைவர் ஜவாஹிருல்லா, ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், சோளிங்கர் எம்.எல்.ஏ. ஏ.எம். முனிரத்தினம், இணை செயலாளர் தேன்மொழி, துணை செயலாளர் ரேவதி உள்பட பலருடன் இருந்தனர்.

    ×