என் மலர்
நீங்கள் தேடியது "leave their"
- திம்பம் வனப்பகுதியில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது.
- வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே சென்று வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி, திம்பம் மலை ப்பகுதி அமைந்துள்ளது. மைசூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையான இந்த மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட அடர்ந்த வனப்பகுதியாக திகழ்ந்து வருகிறது.
அடர்ந்த வனப்பகுதியான தாளவாடி, ஆசனூர், திம்பம், தலமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை மற்றும் மதிய நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருகிறது.
ஆனால் இந்த வனப்பகுதியில் அடிக்கடி இரவு நேரங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் இங்கு எப்போதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதியான இந்த பகுதி பச்சை பசேலென காட்சி அளித்து வருகிறது.
இதை காண்பதற்காகவே தினமும் பொது மக்கள் பலர் கார், வேன், இருசக்கர வாகனங்களில் வந்து இயற்கை அழகை ரசித்து செல்கிறார்கள்.
இதேபோல் மாலை மற்றும் இரவு நேரங்களில் திம்பம் வனப்பகுதியில் கடும் பனி பொழிவு இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் வனப்பகுதியில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. மேலும் அதிகாலை நேர ங்களில் ரோடுகள் தெரியாத வகையில் பனி பொழிகிறது. காலை 8 மணி வரை பனி பொழிவு உள்ளதால் இரு ட்டாக காட்சி அளிக்கிறது.
இதனால் திம்பம் வனப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகள் காலை நேரங்களிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே சென்று வருகிறது.
கடும் பனி பொழிவு கார ணமாக வனப்பகுதி கிராம ங்களில் வசிக்கும் பொது மக்கள் குல்லா ஸ்சுவட்டர் அணிந்த படியே சென்று வருகிறார்கள்.






