என் மலர்
நீங்கள் தேடியது "Lease Cultivation"
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாடு, அமைப்பின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைப்பெற்றது. வரவேற்பு க்குழு தலைவர் துரைராஜ் வரவேற்று பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செய லாளர் டில்லிபாபு மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
அரசாணை 318 -ஐ உடன் செயல்படுத்திட தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குத்தகை பதிவு உரிமை வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் புதிய மாநிலக்கு ழு, மாநில நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. இதில் சங்கத்தின் புதிய மாநில முதல் செயலாளராக சாமி.நடராஜன், தலைவராக செல்வம், பொருளாளராக துரைராஜ், துணைத் தலைவ ர்களாக சீதரன், ஜெயராமன், ஜீவபாரதி, பாண்டியன், துணை செயலாளர்களாக குணசேகரன், துரைராஜ், சபாபதி, ஹேமாவதி ஆகியோர் உள்ளடக்கிய 41 பேர் கொண்ட புதிய மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
புதிய நிர்வாகிகளை அறிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நிறைவுரையா ற்றினார். இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டக்குழு சிம்சன், ஸ்டாலின், செம்பனார்கோவில் வடக்குஒன்றிய செயலாளர் மாக்ஸ், தெற்கு ஒன்றியசெயலாளர் ரவிச்சந்திரன், மயிலாடு துறை இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்டோர் ஏராளமான வர்கள் கலந்துக் கொ ண்டனர். முடிவில் வரவேற்பு குழு செயலாளர் விஜய் நன்றி கூறினார்.






