என் மலர்
நீங்கள் தேடியது "Law school students"
- செடிலோவும் அவரது கணவர் சாண்டியாகோவும் அமெரிக்காவில் தங்கள் புரூக்ளின் வாழ்க்கையை விட்டுவிட்டு வெளியேறினர்.
- செடிலோ போன்றோரின் நெடும்பயணங்கள் நவீன இது சூப்பர்-கம்யூ என்று குறிப்பிடப்படுகிறது.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது ஔவை மொழி. நவீன காலத்தில் அது வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. அந்த வகையில் 30 வயதான நாட் செடிலோ என்ற சட்டக்கல்லூரி மாணவி படிப்புக்காக வாரம் 3,380 கிமீ விமானத்தில் பயணித்து படித்து வருகிறார்.
மெக்சிகோ நாட்டில் வசிக்கும் அவர் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு வாரமும் மான்ஹாட்டனுக்கு விமானத்தில் செல்கிறார்.
தி நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி, செடிலோ திங்கள்கிழமை அதிகாலை மெக்சிகோவிலிருந்து விமானத்தில் ஏறி அமெரிக்காவில் வகுப்புகளை முடித்து செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்புகிறார். நியூயார்க்கின் ஒரு பிரபல சட்டக் கல்லூரியில் தனது இறுதி செமஸ்டரை முடிக்க அவரின் இந்த பயணம் அவசியமாகிறது.
கடந்த ஆண்டு, செடிலோவும் அவரது கணவர் சாண்டியாகோவும் அமெரிக்காவில் தங்கள் புரூக்ளின் வாழ்க்கையை விட்டுவிட்டு மெக்சிகோவில் சிறந்தவ வானிலை மற்றும் மலிவு வாழ்க்கைச் செலவு காரணமாக ஈர்க்கப்பட்டு அங்கு சென்றனர். ஆனால் அவர் தனது சட்டக் கல்வியை விட்டுவிட விரும்பாமல் ஒவ்வொரு வாரமும் நெடும்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஜனவரி முதல், செடிலோ 13 வாரங்களில் விமானங்கள், உணவு மற்றும் குறுகிய கால தங்கத்திற்காக 2,000 டாலர் (₹1.7 லட்சம்) செலவிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் 3,380 கிமீ பயணித்து படித்துவிட்டு அவர் வீடுதிரும்புகிறார். சோர்வு இருந்தபோதிலும், அந்த அனுபவத்தை அவர் மதிப்புக்குரியது என்று அவர் குறிப்பிடுகிறார். செடிலோ போன்றோரின் நெடும்பயணங்கள் நவீன இது சூப்பர்-கம்யூட்டிங் என்று குறிப்பிடப்படுகிறது.
- தேசிய அளவில் இயங்கி வரும் சட்டப் பள்ளிகளுக்கு இடையே இந்த சட்டப் பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது.
- மாணவா்கள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு வந்தனா்.
சென்னை:
சீா்மிகு சட்டப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் சிலா் அடிக்கடி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அவா்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாக்கவும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்து உள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் முதல்வா் வே.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் சீா்மிகு சட்டப் பள்ளி, சட்டக் கல்வியின் தரத்திலும், மாணவா்கள் வருங்கால வழக்குரைஞா்களாகவும், நீதிபதிகளாகவும் மற்றும் பிற உயரிய பதவிகள் வகிப்பவா்களாகவும் உருவாக்கி வருகிறது.
தேசிய அளவில் இயங்கி வரும் சட்டப் பள்ளிகளுக்கு இடையே இந்த சட்டப் பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சில மாணவா்கள் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் சக மாணவா்கள் மீது உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுவதும், தங்களுக்குள்ளே தாக்கி கொள்வதும், வெளியில் இருந்து வருபவா்களை தாக்குவதும் நடந்து வருகிறது.
இது சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதற்கு சமம். சட்டப் பல்கலைக்கழகம் என்ற முறையில் இந்த செயல்பாடுகள் ஏற்கத்தக்கதல்ல.
இதுவரை இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவா்கள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு வந்தனா்.
ஆனால், இனிமேல் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவா்கள் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவ தோடு, சட்டப் பள்ளியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவா்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






