search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmikandan MLA"

    • லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 20 பயனாளிகளுக்கு மொத்த ரூ 4 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் முற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பாலுட்டும் தாய்மார்களுக்க நிதியுதவி 80 பயனாலிகளுக்கு மொத்த ரூ.11.20 லட்சம் மற்றும் தொடர்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 பயனாளிகளுக்கு மொத்த ரூ.4 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    இதில் லட்சுமிகாந்தன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் பயனாளிகள் என திரளானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

    • மாணவர்கள் தீய பழக்கத்திற்கு செல்லாமல் இருக்க விளையாட்டு, யோகா போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
    • சர்வதேச நண்பர்கள் தினத்தன்று போலீசார் தங்களது பகுதிகளில் நல்லுறவு கூட்டம் நடத்த வேண்டும்.தலைகவசம் அபராதத்தை நெறிப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் பேசியதாவது:-

    மாணவர்கள் தீய பழக்கத்திற்கு செல்லாமல் இருக்க விளையாட்டு, யோகா போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு உளவியல் வகுப்பு நடத்த வேண்டும். மாணவர்களை மாடித்தோட்டம், காடுகள் வளர்க்க ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும்.

    காவல்துறையும், இளைய சமுதாயத்தையும் ஒன்றிணைக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சர்வதேச நண்பர்கள் தினத்தன்று போலீசார் தங்களது பகுதிகளில் நல்லுறவு கூட்டம் நடத்த வேண்டும்.தலைகவசம் அபராதத்தை நெறிப்படுத்த வேண்டும்.

    காவலர்கள் புகார் ஆணை யத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.மின் கம்பியில் சிக்கி இறக்கும் ஆடு மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும்.

    வடமாநில தொழி லாளர்கள் ஆதிக்கம் புதுவையில் அதிகமாக உள்ளது. அரசு இதில் தலையிட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு லட்சுமிகாந்தன் பேசினார்.

    • சேலிய மேடுபேட்டில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில், பழுதடைந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்காகவும், புதிதாக கழிவுநீர் தொட்டி அமைத்து, பழுதான பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.12 லட்சத்து 93 ஆயிரம் செலவில் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பொதுப் பணித்துறை உதவிப்பொறி யாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ், பள்ளி தலமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதிக் குட்பட்ட சேலிய மேடுபேட்டில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில், பழுதடைந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்காகவும், புதிதாக கழிவுநீர் தொட்டி அமைத்து, பழுதான பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.12 லட்சத்து 93 ஆயிரம் செலவில் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு, கல்வித்துறை துணை ஆய்வாளர் (வட்டம்-3) பக்கிரிசாமி, பொதுப் பணித்துறை உதவிப்பொறி யாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ், பள்ளி தலமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் சிறுவர் பூங்கா அருகில் உள்ள குறுக்குத் தெருவில் குடிநீரில் மழை நீர் கலந்து பாதிக்கப்படுவதாகவும் சாலையை மேம்படுத்த வேண்டும்.
    • ரூ.7.15லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் சிறுவர் பூங்கா அருகில் உள்ள குறுக்குத் தெருவில் குடிநீரில் மழை நீர் கலந்து பாதிக்கப்படுவதாகவும் சாலையை மேம்படுத்த வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி–காந்தனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அதன்படி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ.7.15லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் கிருமாம்பாக்கம் கிராம முக்கிய பிரமுகர்கள் என்.ஆர்‌காங்கிரஸ் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து கிருமாம்பாக்கம் வில்லிக குட்டை மயானத்திற்கு தார் சாலை மற்றும் குளியல் வசதிகளுடன் கூடிய ஈமச்சடங்கு மண்டபம் அமைக்க ரூ.8.72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பூமி பூஜையை லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ செய்து தொடங்கி வைத்தார்.

    ×