search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi Choradia School"

    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் லட்சுமி சோரடியா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • 3 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் எஸ்.எஸ்.ஆர். நகரில் இயங்கி வரும் லட்சுமி சோரடியா பள்ளியில் கடந்த கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது பள்ளியின் 100 சதவீத தேர்ச்சியாகும். மாணவி சுவாதி 600-க்கு 588 மதிப்பெண்களும், மாணவி அபிநயா 578 மதிப்பெண்களும், மாணவர் ராகுல் 575 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    24 மாணவர்கள் தலா 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். மாணவர்கள் 7 பேர் பல்வேறு பாடங்களில் தலா 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தேவசேனா 500-க்கு 486 மதிப்பெண்களும், மாணவி சபிதா 481 மதிப்பெண்களும், சுகாசினி 473 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 14 மாணவர்கள் தலா 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். 3 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளையும், அதிக மதிப்பெண்கள் பெற கடுமையாக உழைத்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் டி.மாவீர்மல் சோரடியா, பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா ஆகியோா் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள்.

    ×