search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumuli hills"

    நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் குமுளி மலைச்சாலையில் 8-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

    தமிழக கேரள எல்லைப்பகுதியான குமுளி, போடிமெட்டு, கம்பம் மெட்டு ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் குமுளி மலைச்சாலையில் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது.

    அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்த போது மற்றொரு இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கனமழை காரணமாக கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

    வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே எப்படியாவது வேலைக்கு சென்றுவிட வேண்டும் என போடி மெட்டு, கம்பம் மெட்டு வழியாக வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது குமுளி மலைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் வாகனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றார்.

    பைக் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் லோயர் கேம்ப்பில் இருந்து குமுளி வரை மோட்டார் சைக்கிளில் ட்ரிப் அடித்து வருகின்றனர்.

    பஸ்களில் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மோட்டார் சைக்கிளில் ஒரு நபருக்கு ரூ.100 வசூலிக்கின்றனர். மேலும் மலைச்சாலையில் 3 முதல் 4 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது குறித்து போலீசார் எச்சரித்த போதும் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் வேறு வழியின்றி மோட்டார் சைக்கிளில் அதிக விலை கொடுத்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    எனவே அரசு சார்பில் பொதுமக்கள் சென்று வர வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் அதிக ஆட்களை ஏற்றிக் கொண்டு மலைச்சாலையில் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
    ×