search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolathur accident"

    கொளத்தூரில் குடிபோதையில் சிறுவன் காரை ஓட்டியதில் 4 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். குடிபோதையில் காரை ஓட்டிய சிறுவனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #accident

    மாதவரம்:

    கொளத்தூர், பாலாஜி நகரில் நேற்று இரவு ஒருவரது வீட்டில் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சி முடிந்ததும் சமையல் செய்ய வந்த 17 வயது சிறுவன் உள்பட சிலர் மது அருந்தினர். அப்போது சிறுவனிடம், கேட்டரிங் உரிமையாளர் ஒரு பொருளை தனது காரில் வைக்கும்படி கூறி உள்ளார்.

    ஆனால் அந்த சிறுவன் காரை ஓட்டிப் பார்த்ததாக தெரிகிறது. மாதவரம், தணிகாசலம் நகர், குமரன் பஸ் நிலையம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலை யோரத்தில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது மோதியது.

    பின்னர் அவ்வழியே மொபட்டில் வந்த மேலும் 2 பெண்கள் மீது மோதி அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயின் சுவரை உடைத்து தொங்கியபடி நின்றது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

    விபத்தில் சிக்கிய 4 பெண்களுக்கும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குடிபோதையில் காரை ஓட்டிய சிறுவனிடம் கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #accident

    ×