search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kokila Hospital"

    • சிறப்பு குழந்தைகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை முறை குறித்த 6 நாள் கருத்தரங்கு நடந்தது.
    • மதுரை கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் ஆயுஷ் செவிலியர்களுக்காக தொடங்கியது.

    மதுரை

    மத்திய ஆயுஷ் அமைச்சகம் நிதி உதவியுடன் ஆயுஷ் செவிலிய சிகிச்சையாளர்க–ளுக்கான "சிறப்பு குழந்தைகளுக் கான சித்த புற மருத்துவ சிகிச்சை முறைகள்" பற்றிய 6 நாட்கள் தொடர் மருத்துவ கருத்தரங்கு மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மதுரை ஆண்டாள்புரம் ஓட்டல் ஸ்ரீதேவியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதனை சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முதல் வர் பேராசிரியர் டாக்டர் கே.கனகவல்லி, குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார். மேலும் அவர் ஆயுஷ் தெரபிஸ் டுளுக்கான திறன் மேம் பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். சித்த மருத்துவத்தின் சிறப்பே புற மருத்துவ முறைகள் தான். சிறந்த முறையில் மருத்துவ ஆவணங்களை பதிவு செய்து புற மருத்துவ சிகிச்சையின் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய அவசியம், ஆங்கில மருத்துவத்தில் இருப்பது போன்று செவிலிய பணி மட்டுமல்லாமல் நோயாளிக–ளின் உடனிருந்து புறமருத்துவ சிகிச்சையை தொடர்ந்து செய் யும் வாய்ப்பு ஆயுஷ் தெர–பிஸ்டு–களுக்குத்தான் உள்ளது என் றார்.

    மேலும் பணியின்போது சொந்த விருப்பு வெறுப்பு இன்றி நோயாளிகளின் பாது–காப்பு மற்றும் முன்னேற் றத்தை கருத்தில் கொண்டு ஆயுஷ் தெரபிஸ்டுகள் பணி புரிய வேண்டும் என அறிவுரை வழங்கினார். கோகிலா சித்த மருத்துவமனை டாக்டர் ஜெ.–ஜெயவெங்கடேஷ் வரவேற்றார். அருப்புக்கோட்டை தி லெமூரியா சித்த மருத்துவ–மனை டாக்டர் பா.மணி–கண் டன் வாழ்த்துரை வழங்கி–னார்.

    கோகிலா சித்த மருத்துவ–மனை மற்றும் ஆராய்ச்சி மைய உறைவிட மருத்துவ அலுவலர் பா.பவித்ரா பரதநாட்டியம் ஆடி அனைவரையும் வியக்க வைத்தார். கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய உயர் நிர்வாக அலுவலர் ச.செந்தில்நாதன் நன்றி கூறினார். ஆயுஷ் தெரப்பிஸ்டுகளுக்கான புற–மருத்துவ செய்முறை பயிற்சி கையேடு புத்தகம் வெளியி–டப்பட்டது.

    கோகிலா சித்த மருத்துவ–மனை ஆராய்ச்சி மைய குழந்தை மற்றும் மகளிர் மருத்துவ பிரிவு மருத்துவர் டாக்டர் தபசினி சிறப்பு குழந்தைகள், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக் கான பொடி திமிர்தல், தப்பளம் புறவளையம் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் அதன் செய்முறைகளை நேரிடை பயிற்சியாக செய்து காண்பித்தார்.

    தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, புது–டெல்லி, கோவா ஆகிய மாநி–லங்களில் இருந்து 30 ஆயுஷ் தெரபிஸ்டுகள் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சி தொடர்ந்து 6 நாட்களாக 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மற்றும் வருகை தர உள்ள சித்த மருத்துவ பேராசிரியர்கள், ஆதரவு வழங்கிய தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மத்திய சித்தா ரிசர்ச் கவுன்சில், தமிழ் நாடு இந்திய மருத்துவ துறை இயக்குனரகம், இந்திய மருத்து–வத்துறை பாண்டிச்சேரி, சாந்தகிரி சித்த மருத்துவக் கல்லூரி, ஆரோக்கிய சித்த மருத்துவமனை, மணிப்பால் மருத்துவக் கல்லூரி சித்த மருத்துவப் பிரிவு மற்றும் அனைத்து தனியார் மருத்துவ–மனைகளுக்கும் கோகிலா மருத்துவமனை நன்றிகளை தெரிவித்துள்ளது.

    ×