என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "koel song"

    • குளிர்காலத்தில் குயில் எங்கே செல்கிறது என்பது புரியாத புதிர்.
    • குயிலைப் பற்றி பாடாத இலக்கியங்கள் இல்லை.

    குயிலில் கூவுவது ஆண்குயில் மட்டும்தான். பெண் குயில் கூவுவதில்லை. பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும் உயிர் இது. மகிழ்ச்சி ஏற்பட்டால் 'கிளிக் கிளிக்' என்ற ஒலியுடன் ஆண்குயிலை, பெண்குயில் கொஞ்சி விளையாடும்.

    குயிலின் கானத்தை காதால் கேட்டு நாம் ரசிக்கலாமே தவிர, குயிலைக் கண்ணால் பார்ப்பது அரிது. உயர்ந்த மரங்களின் நடுவே பிறர் கண்ணில் படாமல் சஞ்சரிக்கும் பறவை இது.

    முதல் மரியாதை திரைப்படத்தில், 'பூங்காத்து திரும்புமா என் பாட்டை விரும்புமா?' பாடலில், 'குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா?' என்று கேட்டிருப்பார் வைரமுத்து.

    குயில், இளவேனில் எனப்படும் வசந்த காலத்தில் மட்டும்தான் நம்மிடையே காணப்படுகிறது. குளிர்காலத்தில் குயில் எங்கே செல்கிறது என்பது புரியாத புதிர்.

    குளிர் காலத்தில் குயில் கூவுவதும் இல்லை. குயில் அப்போது தற்காலிகமாக இடம் பெயர்ந்துவிடும் என பறவை ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால், அதை உறுதிப்படுத்த இதுவரை போதிய ஆதாரம் எதுவும் இல்லை.

    குயிலைப் பற்றி பாடாத இலக்கியங்கள் இல்லை. குயிலைப்பற்றி பாடாவிட்டால் அவை இலக்கியங்களும் இல்லை.

    -மோகன ரூபன்

    ×