search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodungalur"

    • சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் உள்ளன.
    • சாந்தாட்டம் என்ற சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பகவதி அம்மன் கோவில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து குருவாயூர் செல்லும் சாலையில் 35 கி.மீ தொலைவில் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கேரளாவில் அமைந்துள்ள கோயில்களில் இது ஒரு முக்கியமான கோவிலாகும். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான் செய்கிறார்கள்.

    ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளார். அப்போதெல்லாம் இங்கு உயிர்ப்பலியிட்டும், கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள். அதன்பின் ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபினியாக்கினார்.

    ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும். உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார்.

    அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்யம் செய்யப்படுகிறது. அம்மனின் கர்ப்பகிரகத்திற்கு அருகே ஒரு ரகசிய அறை உள்ளது. இதையும் மூலஸ்தானமாக கருதி இதற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.

    சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில் நின்று பகவதியையும் சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு இங்குள்ளது சிறப்பாகும். அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை. சாந்தாட்டம் என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது.

    அம்மை நோய் கண்டவர்கள், கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், மன அமைதி இல்லாதவர்கள், எதிரி தொந்தரவு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடையலாம் என்பது நம்பிக்கை. கோவில் திருவிழாக்கள்:

    தை மாதம் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை தாழப்புலி என்ற உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிய்ல் சுமங்கலி பெண்கள் எண்ணெய், குங்குமம், மஞ்சள், பூ, இவைகளை மேளதாளத்துடன் அம்மனுக்கு படைப்பார்கள். நவராத்திரி, சிவராத்திரி, ஆடிவெள்ளி தினங்களில் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    வெப்பநோய், கண்பார்வை கோளாறு, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல அம்மனை வழிபட்டால் அவை நிவர்த்தியாகும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் துலாபரம் செலுத்துவதாக வேண்டிக்கொண்டால் விரைவில் அவர்களுக்கு குழந்தப்பேறு வேண்டும் என்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், அன்னதானம் செய்தும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

    ×