search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodiyetram"

    • சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.
    • கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது.

    விழாவின் கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20-ந்தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று கொடியேற்று விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது.
    • காலை 6.30 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவர். இந்த ஆண்டிற்கான சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று பெருங்கோட்டூர் சென்று கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று கொடியேற்று விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. காலை 6.30 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா, துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி, முப்பிடாதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

    சித்திரைத்திருநாளில் சுவாமி, அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.
    • சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கட்டிட கலையில் சிறந்து விளங்குகிறது.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    2-ம் நாளான நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவின் கடைசி நாளான 23-ந் தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    • பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.
    • வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திசையன்விளை:

    தமிழகத்தில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இக்கோவிலில் சுவாமி லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி சந்திரசேகரர்-மனோன்மணி அம்மாள் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மேளதாளம் முழங்க கொடி பட்டம் ஊர்வலம் நடந்தது. கோவில் முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்த பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    விழாவில் தேர் கமிட்டி தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து தலைவர் கவிதா ராஜன், துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் உதய மார்த்தாண்ட அபிஷேகம், விநாயகர் வீதி உலா, இரவு சாய ரட்சை பூஜை, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்மாள் அன்ன வாகனம், கைலாய பர்வத வாகனம், காமதேனு வாகனம், வெள்ளி குதிரை வாகனத்தில், சிகப்பு சாத்தி, பச்சை சாத்தி வீதி உலா நடக்கிறது. மேலும் இரவில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பட்டிமன்றம், வாண வேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடக்கிறது. தேர் நிலைக்கு வந்ததும் தீர்த்தவாரியும், மூலவர் சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜையும், உச்சிகால பூஜை, உற்சவர் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 26-ந் தேதி காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்ம கர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் செய்து வருகிறார்.

    • மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
    • கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 4-ந்் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தேவாங்கர் சமூகத்தின் சார்பில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக தளி சாலை பூமாலை சந்து பகுதியிலுள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. கோவில் மண்டபத்தில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள் துணியா லான கொடி மாரியம்மன் உருவப்படத்துடன் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கொடி மரத்துக்கு முன்பு ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணியளவில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கையில் பூவோடு ஏந்தி சன்னதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணியளவில் அம்மன் புஷ்ப அலங்காரத்துடன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. கோவிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்ற அம்மன் திருவீதி உலாவின் போது வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுலவர் வெ.பி.சீனிவாசன், யூ.எஸ்.சஞ்சீவ் சுந்தரம், தேவாங்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஏ.சீனிவாசன், அறங்காவலர் கிருஷ்ணராஜ், வி.பி.எஸ்.ஆர்.பிரகாஷ், கொங்கு ரவி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர்.
    • ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது.

    அவிநாசி :

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டம் வருகிற 25ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர். கோவில் வளாகத்தில் தகர ஷெட்டால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ள தேரை தயார்படுத்து வதற்காக ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் தேர் விழாவிற்கான முகூர்த்த ஆயக்கால் பூஜை நடந்தது.

    செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் கூறிய போது,தொடர்ந்து தேரை தயார்படுத்தி அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெறும் என்றார்.

    • சிவகிரியில் 100 ஆண்டு கால பழமையான திரவுபதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா நடப்பது வழக்கம்.
    • இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிவகிரி:

    சிவகிரியில் 100 ஆண்டு கால பழமையான திரவுபதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா நடப்பது வழக்கம்.

    இந்த வருடம் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவிலில் உள்ள மூலவர் உட்பட அனைத்து சாமிகளுக்கும் சந்தனம், பன்னீர், பால், தயிர், இளநீர் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவிலிலிருந்து கொடி பட்டத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.

    பின்னர் கொடிமரத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் பூசாரி மாரிமுத்து தலைமையில் இலஞ்சி குமாரர் கோவில் அர்ச்சகர் கணேச கனவாடிகன் மற்றும் சுந்தர் பட்டர் என்ற ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து திரவுபதி, கிருஷ்ணர், அர்ச்சுனன்உள்பட அனைத்து சாமி சிலைகளுக்கும் காப்புகள் கட்டப்பட்டன. கோவில் பூசாரி மாரிமுத்துவுக்கு இலஞ்சி குமாரர் கோவில் அர்ச்சகர் கணேச கனபாடிகன் காப்பு கட்டியவுடன் பூக்குழி இறங்குவதற்காக 41நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு பூசாரி காப்பு கட்டினார்.

    1-ம் திருநாளான நேற்று கீழத்தெரு தேவர் சமூகத்தினரால் நடத்தப்பட்டது. அம்மன், கிருஷ்ணன் அர்ச்சுனன் ஆகிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி ஒவ்வொரு நாள் இரவும் வீதியுலா காட்சியின் போது பக்தர்களுக்கு காட்சியளிப்பர். ஒவ்வொரு நாள் திருநாளும் ஒவ்வொரு சமூகத்தினரால் நடத்தப்படுகிறது.

    வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் திரவுபதி அம்மன் கோவில் முன்பாக உள்ள பூக்குழி திடலில் பூக்குழி நடைபெறும். அன்றைய தினம் 1000 பக்தர்கள் பூக்குழி இறங்குவர்

    விழாவிற்கான ஏற்பாடுகளை காப்பு கட்டும் பக்தர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் தனுஷ்கோடி, செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பாண்டியராஜன், மற்றும் அனைத்து காப்பு கட்டிய பக்தர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய தலைவர்கள், தலையாரி அழகுராஜா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வருகிற 15-ந்தேதியன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    ×