search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kidarakulam"

    • பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுநீதிநாள் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு, அதிகாரிகள் தரப்பில் பதில் தரப்பட்டது.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், கிடாரக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காசிக்குவைத்தான் கிராமத்தில், மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

    வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்டாட்சியர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ஆண்டி வரவேற்றார்.

    பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுநீதிநாள் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு, அதிகாரிகள் தரப்பில் பதில் தரப்பட்டது. தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முகாமில், சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர் செல்வி பத்மகுமாரி, வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்சமது, வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம், கால்நடை மருத்துவர் ராமசெல்வம், தலைமைக் காவலர் செந்தில்ராணி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாதவி ஆனந்தராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெகத்குரு, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×