search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keerthy"

    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். #KeerthySuresh
    கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் ஐந்து, ஆறு படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால், தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

    இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘மலையாளத்தில் நான் முதலில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழ் சினிமாவில் நடித்ததால் தான் எனக்கு ஒரு அடையாளம் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது. நடிகையாக வேண்டும் என்று படிக்கும்போது இருந்தே ஆசை எதுவும் இல்லை. மாடலிங் செய்து வந்தேன். ஆனால் கடவுளின் அணுகிரகம் இருந்ததால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, நடிகையாகி விட்டேன். கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நிறைய புதுப்புது இயக்குனர்கள் அறிமுகம் ஆகி பல்வேறு வித்தியாசமான படங்களை இயக்குகிறார்கள். படங்களை பார்க்க வரும் ரசிகர்களும் நல்ல தெளிவாகவே உள்ளனர்.



    என்னால் முடிந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இதற்காக கடுமையாக உழைக்கிறேன். திருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லை. இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். நடிகர் விஜய் கூட நடித்துவிட்டேன். அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் என்றால் அது நடக்கும். வரும்போது பார்க்கலாம். அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மனதில் ஒரு துளிகூட ஆசை இல்லை’ என்றார்.
    நடிகையர் திலகம் படத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், நான் அந்த ரகம் இல்லை, ஆசையும் இல்லை என்று கூறியிருக்கிறார். #KeerthySuresh
    கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்தில் நடித்த பிறகு மேலும் பிரபலமாகி இருக்கிறார். இப்போது விஜய் ஜோடியாக சர்கார், விக்ரமுடன் சாமி–2, விஷாலுடன் சண்டக்கோழி–2 படங்களில் நடித்து வருகிறார்.

    பெரிய படங்களில் நடிப்பதால் சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்றும் கிசுகிசுக்கள் வருகின்றன. இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்போது, ‘எனக்கு பணம் தேவை இல்லை. கதைதான் முக்கியம். எந்த துறையானாலும் வாய்ப்பு இருக்கும்போது பயன்படுத்தி நிறைய சம்பாதித்து விட வேண்டும் என்று சொல்வார்கள். 

    மார்க்கெட் இருக்கும்போது நடிகைகள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் சொல்வது உண்டு. நான் அப்படிப்பட்ட ரகம் இல்லை.  எனக்கு பணம் முக்கியம் இல்லை. ஒரே நேரத்தில் உச்சத்துக்கு வரவேண்டும். கோடிகோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. 

    பெயர், புகழ், பணம் சம்பாதிப்பதை விட நல்ல கதைகளில் நடித்தேன் என்று பெயர் வாங்கவே விரும்புகிறேன். சம்பளத்தை உயர்த்த மாட்டேன்.



    தெலுங்கில் 3 ஆண்டுகளில் 4 படங்களில் நடித்தேன். அதில் 3 படங்கள் வெற்றி பெற்றன. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படமும் பெயர், புகழ் சம்பாதித்து கொடுத்தது. இரண்டு மொழிகளிலும் எனக்கு இப்போது நிலையான இடம் கிடைத்து விட்டது. 

    அதிக படங்களில் நடிப்பதை விட குறைவான படங்களாக இருந்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தோம் என்பதில்தான் பெருமை இருக்கிறது’ என்றார்.
    ×