search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaval App"

    • காவல் செயலி தொடர்பாக இந்திய நாடார்கள் பேரமைப்பு தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தது.
    • தற்போது கோரிக்கையை ஏற்று வணிகர்களுக்கான காவல் செயலியை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது.

    வீ.கே.புதூர்:

    தமிழக அரசால் வியாபாரிகளின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவல் செயலி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் நாடார் வழிகாட்டுதலின்படி மாநிலத் துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் கலந்துகொண்டு தென்காசி பகுதி வியாபாரிகளுக்கு வழங்கினார்.

    இதில் கலந்துகொண்டு லூர்து நாடார் பேசுகையில், மாமூல் கேட்டு மிரட்டி சில இடங்களில் வியாபாரிகள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க பாதுகாப்பு காவல் செயலியை தமிழக அரசு உருவாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய நாடார்கள் பேரமைப்பு தமிழக முதல்-அமைச்சருக்கு வைத்திருந்தது. தற்போது கோரிக்கையை ஏற்று வணிகர்களுக்கான காவல் செயலியை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நாடார்கள் பேரமைப்பு தென்காசி நகர தலைவர் சுப்ரபிமணியன், சுரண்டை நகர தலைவர் ஆனந்த் காசிராஜன்,தென்காசி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் நாராயணன், துணைத் தலைவர் ராமசாமி, பொருளாளர் சுடலை கனி, துணைச் செயலாளர் வெங்கடேஷ், துணை பொருளாளர் சிவசுப்பிரமணியன்,

    தென்காசி வியாபாரிகள் சங்க தலைவர் பரமசிவன்,செயலாளர் மாரி யப்பன், துனைசெயலாளர் அருணாச்சலம், பொருளாளர் மைதீன், சந்திரமதி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×