என் மலர்
நீங்கள் தேடியது "Kata Bhumi Puja"
- மேலூர் நகராட்சி அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது.
- நகர்மன்ற தலைவர் முகமதுயாசின் பூஜை செய்தார்.
மேலூர்
மேலூர் நகராட்சியில் மாநில நிதி திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி அலுவலக மாடியில் கூடுதல் அலுவலக கட்டிடம் மற்றும் நகர்மன்ற கூடம் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. நகர்மன்ற தலைவர் முகமதுயாசின் பூஜை செய்தார்.
ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், துணைத் தலைவர் இளஞ்செழியன், சுகாதார அலுவலர் மணிகண்டன், ஓவர்சியர் சரவணன், நகரமைப்பு ஆய்வாளர் சரவணன், மேலாளர் தியாகராஜன், அலுவலர் ஜோதி, ஒப்பந்ததாரர் லத்தீப் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.