search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karnataka flood"

    கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளச்சேதங்களை ஹெலிகாப்டரில் பார்வையிடாமல் முதல்-மந்திரி குமாரசாமி பேப்பர் படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. #KarnatakaFloods #karnatakarain
    பெங்களூர்:

    கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய தென்மேற்கு பருவமழை கர்நாடகத்திலும், மேற்கு தொடர்ச்சி மழை பகுதியிலும்கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும் உடுப்பி மாவட்டத்திலும் வெள்ளசேதம் ஏற்பட்டுள்ளது. மைசூர், மாண்டியா மாவட்டங்களில் காவிரி நீரை அணைகளில் இருந்து அதிக அளவு திறந்து விட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடகு மாவட்டத்தின் மீது ஹெலிகாப்டர் பறந்து சென்றபோது அங்கு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகளும், விமானப்படை ஊழியர்களும் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.


    ஆனால் குமாரசாமி அதை கவனிக்காமல் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார். இதனால் அதிகாரிகளும், விமானப்படையினரும் அதிர்ச்சி அடைந்தனர். குமாரசாமி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை பார்க்காமலேயே அந்த இடத்தை விட்டு ஹெலிகாப்டர் கடந்து வேறு பகுதிக்கு சென்றுவிட்டது.

    குமாரசாமி ஹெலிகாப்டரில் பேப்பர் படிக்கும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ‘‘இந்த நாட்டின் முதல்-மந்திரிகளில் ஒருவர் வெள்ளச்சேதத்தை பார்வையிடுவதை பாருங்கள்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குமாரசாமி பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாக கர்நாடக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  #KarnatakaFloods #karnatakarain #KodaguFloods #kumaraswamy 
    ×