search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kariyapatti police have registered a case."

    • சிவகாசி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் குறித்து காரியபாட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி கணேஷ் காலனியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் கலைச்செல்வன் (22). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கலைச்செல்வன் சுடுகாட்டுக்கு சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று அவரை வீட்டுக்கு அழைத்தனர். அதற்கு கலைச்செல்வன் சிறிது நேரத்தில் வருவதாக கூறி உள்ளார். குடும்பத்தினர் அங்கிருந்து சென்ற பின்னர் அருகில் உள்ள தோட்டத் துக்கு சென்ற கலைச் செல்வன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக் குளித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்தி லேயே இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    இளம்பெண்

    காரியாபட்டி அருகே உள்ள கழுவனச்சேரியை சேர்ந்தவர் ஆண்டிச்சி. இவரது மகள் முத்துஈஸ்வரி (வயது 17). இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் இருந்த ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லுமாறு கூறி விட்டு பெற்றோர் வெளியே சென்று விட்டனர்.

    ஆனால் முத்துஈஸ்வரி அதனை செய்யவில்லை என கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகளை கண்டித்தனர். இதில் விரக்தி அடைந்த முத்துஈஸ்வரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காரியபாட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×