என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகாசி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை
- சிவகாசி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் குறித்து காரியபாட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கணேஷ் காலனியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் கலைச்செல்வன் (22). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கலைச்செல்வன் சுடுகாட்டுக்கு சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று அவரை வீட்டுக்கு அழைத்தனர். அதற்கு கலைச்செல்வன் சிறிது நேரத்தில் வருவதாக கூறி உள்ளார். குடும்பத்தினர் அங்கிருந்து சென்ற பின்னர் அருகில் உள்ள தோட்டத் துக்கு சென்ற கலைச் செல்வன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக் குளித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்தி லேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
இளம்பெண்
காரியாபட்டி அருகே உள்ள கழுவனச்சேரியை சேர்ந்தவர் ஆண்டிச்சி. இவரது மகள் முத்துஈஸ்வரி (வயது 17). இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் இருந்த ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லுமாறு கூறி விட்டு பெற்றோர் வெளியே சென்று விட்டனர்.
ஆனால் முத்துஈஸ்வரி அதனை செய்யவில்லை என கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகளை கண்டித்தனர். இதில் விரக்தி அடைந்த முத்துஈஸ்வரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காரியபாட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்