என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kappalur govt college
நீங்கள் தேடியது "Kappalur govt college"
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் அரசு கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சோமசுந்தரம் என்பவர் முதல்வராக உள்ளார். கல்லூரியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் சமூக விரோதச் செயல்கள் நடப்பதாக புகார் எழுந்திருந்த நிலையில் நேற்று முதலாம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கம்பு, கட்டை போன்ற ஆயுதங்களால் மோதிக் கொண்டனர்.
இதில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகன் சூர்யபிரகாஷ் (வயது 20) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த மோதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது மோதலில் ஈடுபட்ட திருமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ் (18), கண்டு குளத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் முத்துக்குமார், கூத்தியார்குண்டைச் சேர்ந்த முத்தையா மகன் அஜித்குமார், செல்வராஜ் மகன் ராஜ்குமார், தோப்பூரைச் சேர்ந்த சூர்யா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரியில் மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சோமசுந்தரம் என்பவர் முதல்வராக உள்ளார். கல்லூரியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் சமூக விரோதச் செயல்கள் நடப்பதாக புகார் எழுந்திருந்த நிலையில் நேற்று முதலாம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கம்பு, கட்டை போன்ற ஆயுதங்களால் மோதிக் கொண்டனர்.
இதில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகன் சூர்யபிரகாஷ் (வயது 20) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த மோதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது மோதலில் ஈடுபட்ட திருமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ் (18), கண்டு குளத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் முத்துக்குமார், கூத்தியார்குண்டைச் சேர்ந்த முத்தையா மகன் அஜித்குமார், செல்வராஜ் மகன் ராஜ்குமார், தோப்பூரைச் சேர்ந்த சூர்யா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரியில் மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X