search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanta rao"

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா -2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுகுமார் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    இந்நிலையில், 'புஷ்பா' திரைப்படம் குறித்து திருப்பதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஜி காந்தா ராவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் கூறியதாவது, செம்மர கடத்தலை தடுப்பதற்காக போலீசார் மற்றும் அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் குறித்து தவறாக சித்தரிக்க வேண்டாம். கடத்தல்காரனை ஹீரோவாக காட்டிவிட்டு போலீசை லஞ்சம் வாங்கும் குண்டர்களாக காட்டியது வேதனை அளிக்கிறது. இரண்டாம் பாகத்தில் கடத்தலைத் தடுக்க குடும்பத்தை விட்டு காடுகளுக்குச் சென்று பணிபுரியும் காவலர்களை சரியாக காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×