என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kannada film industry"

    • நாகபூஷனா, 'இக்கத்' திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகர் விருது வாங்கியவர்
    • பிரேர்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்

    கன்னட திரையுலகில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் நாகபூஷனா (37).

    "சங்கஷ்ட கர கணபதி" எனும் திரைப்படம் மூலம் 2018ல் திரையுலகில் அறிமுகமான நாகபூஷனா, இக்கத், படவா ராஸ்கல் மற்றும் ஹனிமூன் ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். 'இக்கத்' படத்திற்காக சிறந்த நடிகர் விருது வாங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகபூஷனா நேற்றிரவு 09:45 மணியளவில் பெங்களூருவின் உத்தரஹள்ளி பகுதியிலிருந்து புறநகர் பகுதியான கொனனகுன்டே எனும் இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    கார் வசந்தபுரம் மெயின் ரோடு அருகில் வரும் போது அங்கு கிருஷ்ணா (58) மற்றும் அவரது மனைவி பிரேர்னா (48) எனும் தம்பதி நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். காரை ஓட்டி வந்த நாகபூஷனா தீடிரென கட்டுப்பாட்டை இழந்தார். இதை தொடர்ந்து நடந்து சென்ற தம்பதியர் மீது கார் மோதியது. அவர்கள் மீது மோதிய கார், அருகே இருந்த ஒரு மின்சார கம்பத்தில் மோதி நின்றது.

    இந்த விபத்தினை தொடர்ந்து இருவரையும், நாகபூஷனா உடனடியாக முனைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். இருந்தும், துரதிர்ஷ்டவசமாக பிரேர்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கால்கள், தலை மற்றும் வயிற்று பகுதியில் அடிபட்ட கிருஷ்ணாவிற்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கியதற்காக நாகபூஷனா மீது குமாரசுவாமி போக்குவரத்து காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்னுடன் நடித்த பல நடிகர்கள் இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள்.
    • நடிகர்களான அவர்களுக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுத்தால், எனக்கு ரூ.1 கோடி மட்டும்தான் தந்தார்கள்.

    சினிமா துறையில் சமீபகாலமாக கதாநாயகர்களுக்கு இணையாக தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று நடிகைகள் குரல் எழுப்பி வருகிறார்கள்.

    தமிழில் 'குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகையான ரம்யாவும் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் ரம்யா பங்கேற்று பேசும்போது, ''என்னுடன் நடித்த பல நடிகர்கள் இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள். நான் முதலில் என்னைவிட குறைவான சம்பளம் பெறும் நடிகர்களோடு பணியாற்றியபோது அந்த படம் ஹிட்டானதும், அந்த நடிகர்களின் அடுத்த படங்களுக்கு என்னைவிட ஐந்து மடங்கு சம்பளம் கொடுத்தார்கள்.

    நடிகர்களான அவர்களுக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுத்தால், எனக்கு ரூ.1 கோடி மட்டும்தான் தந்தார்கள். நாங்களும் நடிகர்கள் வேலையை செய்யும்போது இவ்வளவு சம்பள வித்தியாசம் ஏன் வருகிறது.

    இப்படி சினிமா துறையில் சொல்வதற்கு நிறைய கதைகள் இருந்தாலும், அதை யாரும் தைரியமாக சொல்ல முன்வருவது இல்லை. வித்யாபாலன் திறமையான நடிகை. அவருக்கு கூட நடிகர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை'' என்றார்.

    கன்னட சினிமாவில் பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் அதிகமாக வர வேண்டும். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப ஒத்துப்போகும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, வலுவான கதைசொல்லல் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் கவனம் செலுத்துமாறு நடிகைகளை அவர் வலியுறுத்தினார்.

    ×