search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallatti"

    • ஊட்டி, நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது
    • குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகளுக்காக மண் அகற்றப்பட்டது

    ஊட்டி

    . தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்தன. பருவமழை தீவிரம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மார்க்கெட் பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் படகு இல்லம் செல்லும் சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் மற்றும் ரெயில்வே போலீஸ் நிலையம் பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ரெயில் நிலையம் எதிரே உள்ள வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் ஜவுளிக்கடையில் இருந்த ஆடைகள் நீரில் மூழ்கி சேதமானது.

    . பணிகள் முடிந்தும், தொங்கும் நிலையில் இருந்த பாறைகள் அகற்றப்படவில்லை. கனமழையால் கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் இடையே ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் பாறைகள் தள்ளி வைக்கப்பட்டது. இதேபோல் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டியில் உள்ள தமிழகம் சாலையில் மரங்கள் விருந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். இதேபோல் கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழையால் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டது. மேலும் கடும் குளிர் நிலவுதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    ×