search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeweler Snatched"

    • அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுப்பாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
    • ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    புளியங்குடியை சேர்ந்த வர் பேச்சிமுத்து. இவரது மனைவி சுப்பாத்தாள் (வயது 70). இவர் தனது உறவினர்களுடன் கல்லிடைக்குறிச்சி செல்வ தற்காக ஆலங்குளத்திற்கு பஸ்சில் வந்துள்ளார்.

    அங்கிருந்து அம்பாச முத்திரம் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்த போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுப்பாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சி களின் அடிப்படையில் தப்பியோடிய அந்த பெண்ணை தேடி வருகின்ற னர்.

    ஆலங்குளம் பஸ் நிலையத்தில் மாலை நேரங்க ளில் மது குடித்து விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களும், பள்ளி, கல்லூரி முடித்து வரும் மாணவ-மாணவிகள் வெகு நேரம் பஸ் நிலையத்திலேயே சுற்றி திரிவதும் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடப்பதாக பேருராட்சி கவுன்சிலர் சாலமோன்ராஜா பலமுறை புகார் தெரிவித்துள்ளார்.

    மேலும் பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்கள் இயங்குகிறதா? முடங்கியுள்ள தா? என்பது தெரியவில்லை. இந்த காரணத்தால் பொதுமக்கள், பெண்கள் ஒருவித அச்சத்துடனேயே பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். எனவே இங்குள்ள காமிராக்களை பழுது நீக்குவதுடன், பயணிகள் அதிகமாக வந்து செல்லும் நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×