என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jewel money robbery in kalpakkam
நீங்கள் தேடியது "Jewel Money Robbery In Kalpakkam"
கல்பாக்கம் அணுமின் நிலைய பெண் விஞ்ஞானி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலைய மின் உற்பத்தி பிரிவில் விஞ்ஞானியாக பணி புரிபவர் செல்வியா. கல்பாக்கம் நகரியத்தில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று மாலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். இரவு திரும்பி வந்தபோது வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை, ரூ.75 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்படவில்லை. அருகில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து நகை-பணத்தை மர்மநபர்கள் சுருட்டி உள்ளனர். எனவே வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
உயர் பாதுகாப்பில் உள்ள அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் கொள்ளை நடந்த சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலைய மின் உற்பத்தி பிரிவில் விஞ்ஞானியாக பணி புரிபவர் செல்வியா. கல்பாக்கம் நகரியத்தில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று மாலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். இரவு திரும்பி வந்தபோது வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை, ரூ.75 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்படவில்லை. அருகில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து நகை-பணத்தை மர்மநபர்கள் சுருட்டி உள்ளனர். எனவே வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
உயர் பாதுகாப்பில் உள்ள அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருப்பில் கொள்ளை நடந்த சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X