search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayalalitha death case"

    • 2012 பொதுக்கூட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களை ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
    • உறுதிமொழி கடிதத்தில் அடிப்படையில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

    * 2012 பொதுக்கூட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களை ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

    * உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

    * சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியாவின் சாட்சியத்தின்படி சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே நல்லுறவு இல்லை.

    * சாட்சியங்கள் அளித்த தகவலின்படி, ஜெயலலிதா 4.12.2016 அன்று மாலை 3 மணியில் இருந்து 3.50 மணிக்குள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    * 5.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லை.
    • ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ஜெயலலிதாவை வீட்டில் இருந்து மருத்துவமனையில் அனுமதித்த நபர்களிடம் அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அறிக்கையில், சசிகலா, கே.எஸ்.சிவக்குமார், ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் சசிகலா குற்றம் செய்தவராக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.




    அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் ஸ்டூவர்ட் ரசல், ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ஒருவேளை அது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம்.

    2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை, ஜெ-வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர்.

    அதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா இறந்த நாள் இறந்த நேரத்தில் முரண்பாடு உள்ளது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள்.

    2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • என் ஆணையத்திற்கு மட்டும் அதிக பணம் செலவிடப்பட்டதாக சொல்கிறார்கள்.
    • அறிக்கை ஆங்கிலத்தில் 500 பக்கங்களையும், தமிழில் 608 பக்கங்களையும் கொண்டுள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆணையம் விசாரணையை தொடர வேண்டும் என்று கூறிய முதல்- அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜெயலலிதா மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு இருந்த உடல் நிலை மற்றும் மருத்துவமனையில் சேர்ந்த பிறகு அவரது நிலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 154 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு சம்மன் அனுப்ப முதல் ஒரு மாதம் தேவைப்பட்டது. அதன் பிறகு விசாரணையை தொடங்கினேன். ஒரு வருடத்திற்குள் 149 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி உள்ளேன்.

    இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தபோது ஆறுமுகசாமி ஆணையம் ஒரு நீதிமன்றம் போலவே செயல்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    நீதிமன்றத்தை பொறுத்தவரை வருடத்தில் 200 நாட்கள் வேலை நாட்களாகும். நான் 150 நாட்கள் வேலை பார்த்து ஒவ்வொரு சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையை அதிக பக்கங்களுடன் தயாரித்து உள்ளேன். சிலர் தடை வாங்கினார்கள். அது அவர்களின் உரிமை. எனவே காத்திருந்து தடை நீங்கியதும் விசாரித்து உள்ளேன்.

    இந்த அறிக்கை ஆங்கிலத்தில் 500 பக்கங்களையும், தமிழில் 608 பக்கங்களையும் கொண்டுள்ளது. இந்த அறிக்கையை வெளியிடுவது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக சசிகலாவுக்கு சம்மன் கொடுத்தோம். அவர் விளக்கம் அளிக்க வாய்ப்பையும் கொடுத்தோம். ஆனால் அவர் வரவில்லை என்பதால் எழுதி கொடுத்தார். அதன் பிறகு ஒருவரை கட்டாயப்படுத்துவது சரியாக இருக்காது. அந்த உரிமையை சோதித்து பார்க்க விரும்பவில்லை. சசிகலா விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் அவரிடம் எழுத்து பூர்வமாக விளக்கம் பெறப்பட்டது. சசிகலா தரப்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

    சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இதனால் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் விசாரணை நடத்தவில்லை.

    என்னால் முடிந்த வரை விசாரணை நடத்தி அதை அறிக்கையில் தெரிவித்து இருக்கிறேன். விசாரணை நடத்துவதில் தாமதம் எதுவும் செய்யவில்லை.

    என் ஆணையத்திற்கு மட்டும் அதிக பணம் செலவிடப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு முன்பு எத்தனையோ விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அப்போது எல்லாம் இதுபற்றி எதுவும் சொல்லவில்லையே. ஏன்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×