என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Japan Rocket"
- ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
- மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.
டோக்கியோ:
ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் அந்நிறுவனம் செய்து வந்தது.
ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.
ஆனால் ராக்கெட் புறப்பட்ட சில வினாடிகளில் திடீரென்று நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் வானில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. ராக்கெட்டின் பாகங்கள் கீழே விழுந்ததில் சில இடங்களில் தீப்பிடித்தது, தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
ஜப்பானில் முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இத்திட்டம் வெற்றி பெற்றிருந்தால் ஜப்பானில் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெற்றிருக்கும்.
ராக்கெட் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து அந்நிறுவனம் உடனடியாக பதில் அளிக்கவில்லை.
ஜப்பானில் பிரபல லிவ் டோர்ஸ் இன்டர்நெட், விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறது. தகாபுமி ஹோரி அதன் நிறுவனர் ஆவார்.
இந்த தனியார் நிறுவனம் முதன் முறையாக ‘மொமொ -2’ என்ற ராக்கெட்டை தயாரித்தது. அதை நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் விண்ணில் செலுத்தியது.
கொகைடோ தீவில் உள்ள தைகி சோதனை தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. உடனே தீப் பிழம்பை கக்கியபடி விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட் சில வினாடிகளில் வெடித்து சிதறியது.
வெடித்த ராக்கெட் 10 மீட்டர் நீளம் கொண்டது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்நிறுவனம் ஒரு ராக்கெட் அனுப்பியது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.
அப்போது ஏவப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினீயர்கள் ராக்கெட்டின் கட்டுப்பாட்டை இழந்து விட்டனர். தற்போது 2-வது தடவையாக ஏற்பட்ட தோல்வியால் இந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதைப்பற்றி இந்த நிறுவனம் கவலைப்படவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட தோல்வியை ஆய்வின் மூலம் சரி செய்து மீண்டும் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்துவோம் என அறிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்