search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jama Bandi"

    • தினம் ஒரு உள்வட்டத்தில் உள்ள கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறும்.
    • 31-ந் தேதி சென்னிமலை உள்வட்ட கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடைபெறவுள்ளது.

    ஈரோடு, 

    ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் பெருந்துறை உள்வட்டத்தில் ஜமா பந்தி நடைபெற உள்ளது. இந்த ஜமா பந்தியில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக வழங்கி உடனடித் தீர்வு பெறலாம்.

    இந்த ஜமா பந்தி நிகழ்ச்சி 25-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை தினம் ஒரு உள்வட்டத்தில் உள்ள கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறும். அதன்படி, 25-ந் தேதி பெருந்துறை உள்வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கும், 26-ந் தேதி திங்களூர் உள்வட்டத்துக்கும், 29-ந் தேதி காஞ்சிக்கோயில் உள்வட்டத்துக்கும், 30-ந் தேதி வெள்ளோடு உள்வட்டத்துக்கும், 31-ந் தேதி சென்னிமலை உள்வட்ட கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடைபெறவுள்ளது.

    எனவே, சம்பந்தப்பட்ட உள்வட்டத்தில் உள்ள மக்கள் அந்தந்த தேதியில் தங்கள் பகுதிக்கு நடைபெறவுள்ள ஜமா பந்தியில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    ×