search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jalandhar Bishop Franco Mulakkal"

    கேரளாவில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜலந்தர் பிராங்கோ முல்லக்கல்லிடம் இன்று 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JalandharBishop #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கொடுத்தார்.

    கோட்டயம் போலீசார் கன்னியாஸ்திரியின் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    போலீஸ் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்று திருப்புணித்துறா போலீஸ் நிலையத்தில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் நேரில் ஆஜரானார். பகல் 11 மணிக்கு போலீஸ் நிலையம் சென்ற அவரிடம் கோட்டயம் எஸ்.பி. ஹரிக்குமார், வைக்கம் டி.எஸ்.பி. சுபாஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் போலீசார் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டனர். கன்னியாஸ்திரி தெரிவித்த புகார் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    பகல் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தது. சுமார் 7 மணி நேரம் நீடித்த விசாரணையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் அளித்த பதில்களை போலீசார் பதிவு செய்தனர்.

    பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் நடத்தப்பட்ட விசாரணை பற்றி கோட்டயம் எஸ்.பி. ஹரிக்குமார் கூறும்போது, போலீசாரின் விசாரணைக்கு பி‌ஷப் ஒத்துழைப்பு அளித்தார். அவரின் பதில்களை பதிவு செய்துள்ளோம். இன்னும் பல கேள்விகள் கேட்க வேண்டியது உள்ளது. எனவே இன்றும் விசாரணை நடத்த உள்ளோம் என்றார்.

    அதன்படி இன்று 2-வது நாளாக போலீசார் முன்பு பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் ஆஜர் ஆனார். அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு பதில்களை போலீசார் பதிவு செய்தனர். அப்போது பி‌ஷப், கன்னியாஸ்திரி புகாரில் தனக்கு தொடர்பு இல்லை என கூறி சில ஆவணங்களை போலீசாரிடம் தாக்கல் செய்தார். அந்த ஆவணங்கள் மீது போலீசாருக்கு நம்பிக்கை இல்லை என தெரிகிறது. எனவே விசாரணை முடிவில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் கைது ஆக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    பி‌ஷப் தரப்பில் ஏற்கனவே முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணையை கோர்ட்டு வருகிற 25-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. எனவே பி‌ஷப்பை போலீசார் இன்று கைது செய்வதில் தடை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி மற்றும் உறவினர்கள் கொச்சி வாஞ்சி சதுக்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று 13-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள், மகளிர் இயக்கத்தினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இவர்களில் ஏ.ஐ.எப்.ஐ. அமைப்பினர் நேற்று பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் ஆஜரான திருப்புணித்துறா போலீஸ் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  #JalandharBishop #FrancoMulakkal

    கேரளாவில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜலந்தர் பிராங்கோ முல்லக்கல் இன்று போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். #JalandharBishop #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் (வயது 54) என்பவர் மீது பாலியல் புகார் கூறி உள்ளார்.

    இதுபற்றி அவர் குருவிலங்காடு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். அந்த புகாரில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2016-ம் ஆண்டு வரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் தன்னை மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

    தன் மீதான பாலியல் புகாரை பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு அவர் கேட்ட சலுகைகளை தான் செய்து கொடுக்காததால் தன்னை மிரட்டுவதற்காக பொய் புகார் கூறி உள்ளதாக தெரிவித்தார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு இன்று (19-ந்தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார்கள். இதை ஏற்றுக்கொண்ட பி‌ஷப் தனது பொறுப்புகளை மூத்த பாதிரியார் ஒருவரிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணைக்கு ஆஜராக நேற்றே அவர் கேரளா வந்து விட்டதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் இன்று காலை வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவும் கோட்டயத்தில் முகாமிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கர் கூறும்போது பி‌ஷப்பிடம் விசாரணை நடத்திய பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்றார். இன்றைய விசாரணையின் போது பி‌ஷப்பிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பற்றி போலீசார் கொச்சி சரக ஐ.ஜி. விஜய்சகோராவிடமும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இதற்கிடையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் சார்பில் நேற்று கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 25-ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால் 25-ந்தேதி வரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    பி‌ஷப்பை கைது செய்ய கோரி கொச்சியில் நடைபெறும் தொடர் போராட்டம் இன்று 13-வது நாளை எட்டி உள்ளது. இந்த போராட்டத்தில் 5 கன்னியாஸ்திரிகளும் பங்கேற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரியும் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நாளுக்கு நாள் இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. பி‌ஷப்பை கைது செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.

    இன்று போராட்டம் நடைபெறும் இடத்திலும் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.   #JalandharBishop #FrancoMulakkal
    ×