என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "It should be"

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
    • ஈரோடு மாவட்டத்தில் 16 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில், கொரோனா வைரஸ் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன் பேசி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    கொரோனோ மீண்டும் வருமோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. உலகின் சில இடங்களில் பாதிப்புகள் இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை.

    எனினும் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் போதுமான அளவிற்கு படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தமாக 3,406 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கைகள் இருக்கின்றன. அதை தேவையான சூழல் ஏற்பட்டால் மேலும் 400 படுக்கைகள் அளவிற்கு அதிகரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

    கடந்த முறை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக திடீர் பின்னடைவு ஏற்பட்டது. தற்பொழுது அதையும் எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுகி சோதனைகள் செய்து கொள்ள வேண்டும். மேலும் அதிகாரிகளிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை மேற்கொ ள்வதற்கு வசதியாக இருக்கும்.

    பொதுமக்கள் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக தாங்களாக முன்வந்து பொது இடங்க ளுக்கு செல்லும்போது முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். தடுப்பூசி 2-ம் டோஸ் போடாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும்.

    பூஸ்டர் தடுப்பூசி ஈரோடு மாவட்டத்தில் 16 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய அளவில் பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் அவர்களே தானாக முன்வந்து தனது பணியாளர்களின் உடல்நலம் குறித்து கண்காணிக்க வேண்டும்.

    பள்ளிகளில் குழந்தைகள் 4 நாட்களுக்கு மேல் வரவி ல்லை எனில் அதற்கான காரணத்தை கண்டறிந்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த முறை போல கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவிற்கு இன்னும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் பாதுகாப்புடன் இருந்து தங்களை தொற்றி லிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, துணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர்.சோமசுந்தரம், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) பிரேம குமாரி, மாநகர மருத்துவ அலுவலர் பிரகாஷ், அரசு பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்திய மூர்த்தி, ஈரோடு வருவாய் ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×