search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "involved in irregularities in"

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.
    • விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.

    ஈரோடு:

    தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக அருண் பொறுப்பு ஏற்றதில் இருந்து பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்கி பதுக்கல், கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் விவசாயிகளிடம் போதுமான ஆவணங்களை பெற்று கொண்டு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

    விவசாயிகளிடம் லஞ்சம் பெறக் கூடாது. விவசாயிகளை காக்க வைக்க கூடாது. வியாபாரி களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    அதன் பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் ஈரோடு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார்,

    ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஈரோடு மண்டல மேலாளர் பானுமதி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.

    ஈரோடு மாவட்டம் நசியனூர், காஞ்சி கோவில், பெத்தாம்பாளையம், பள்ளபாளையம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங் களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு விவசாயிகளிடம் இருந்து முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ததுடன், அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.

    மேலும் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி எச்சரிக்கை விடுத்தார். 

    ×