என் மலர்
நீங்கள் தேடியது "Intoxicants"
- போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை குறித்து எடுத்துரைத்தார்.
- உதவி திட்ட அலுவலர் கில்பர்ட் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தூய அந்தோணி யார் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்காக முன்னையம்பட்டி ஊராட்சி புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் கலந்து கொண்டு , இன்றைய மாணவர்களின் தேவைகளும், சமூகப் பணிகளில் மாணவர்கள் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்வது, தன்னம்பிக்கை வளர்ப்பதை பற்றியும், போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளைப் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஏகம் பவுண்டேஷன் இன்பதுரை, ரமேஷ் பிரகாஷ், தூய அந்தோனணியார் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட திட்ட அலுவலர் பிரிட்டோ , உதவி திட்ட அலுவலர் கில்பர்ட் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






