search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "internet to police"

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    • போலீசாருக்கான வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணி இணையதளத்தின் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்க ப்பட்டுள்ளது

    தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 105 ஏட்டுகள், 51 முதல் நிலை போலீசார் மற்றும் 82 போலீசார் என மொத்தம் 238 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளான வரும் 27-ந் தேதி கிழக்கு தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணி யில் ஈடுபடும் போலீசாருக்கான வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணியினை இணைய தளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த பணியை தொகுதி காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ், மாவட்ட வருவாய் சந்தோஷினி சந்திரா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேலும் 238 போலீசாருக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதி களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணியினை இந்தியதேர்தல் ஆணையத்தின் இணை யதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது கணேஷ், தாசில்தார் (தேர்தல்) சிவகாமி, கணினி நிரலாளர் வெங்கடேஷ் உள்படபலர் கலந்து கொண்டனர். 

    ×