search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intelligence Agencies"

    • கோவில் கருவறை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
    • ராமர் கோவில் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 110 ஏக்கரில் சுமார் ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி இதற்காக அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 50 சதவீத வேலைகள் முடிந்து விட்டது.

    அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் மகரசங்கராந்தியின் போது கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

    கோவில் கருவறை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ராமர் கோவில் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டு உள்ளதாகவும் அவர்கள் ராமர் கோவிலை தற்கொலை படை தாக்குதல் மூலம் தகர்க்க சதி செய்து உள்ளதாகவும் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

    உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. கோவிலை சுற்றிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அயோத்தியில் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ×