என் மலர்
நீங்கள் தேடியது "inspects development works"
- வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
- கோம்பைத்தொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குத்தியலத்தூர் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் கடம்பூர் மாக்கம்பாளையம் சாலை குத்தியலத்தூர் பள்ளம் ஓடையில் ரூ.333.40 லட்சம் மதிப்பீட்டில் உய ர்மட்ட பாலம் கட்டும் பணி யினையும், கடம்பூர் மாக்கம் பாளையம் சாலை சர்க்கரை பள்ளம் ஓடையில் ரூ.335.50 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியினையும்,
குத்தியலத்தூர் ஊராட்சி அரிகியம் மேலூர் பகுதியில் ஜல்ஜிவன் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மே ல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியி னையும் நேரில் சென்று பார்வையி ட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்குள்ள பொ துமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இப்பகுதியில் குடிநீர், சாலை வசதி மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கூத்தம் பாளையம் ஊராட்சி கோம்பைத்தொட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவ மயானம் கட்டப்பட்டு வருவதையும்,
அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்க ன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், மாக்கம்பா ளையம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.40 லட்சம் மதிப்பீட்டில் வேளா ண்மை இருப்பு கிடங்கு கட்டப்பட்டு வருவதையும்,
குன்றி ஊராட்சி கோவி லூர் பகுதியில் பாரத பிர தம மந்திரி அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் 32 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,
குத்தியலத்தூர் ஊராட்சி அணைக்கரை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட த்தினையும் மற்றும் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்டு வரும் சமை யலறை கட்டிடத்தினையும் என சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட மலைக்கிராம பகுதிகளான குத்தியலத்தூர், கூத்த ம்பாளையம் மற்றும் குன்றி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூத்தம்பாளையம் ஊராட்சி கோம்பைத்தொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரை யாடினார்.
தொடர்ந்து கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவலர் களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வகாப், சத்தியமங்கலம் தாசிர்தார் சங்கர் கணேஷ், கூத்தம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா, உதவி பொறியாளர்கள் முருகன், ஜெயகாந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.






