என் மலர்
நீங்கள் தேடியது "Inspection of buses"
- பொங்கல் பண்டிகை ஒட்டி அதிக அளவில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, சேலம் மண்டலத்தில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய 18 பேர் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
பொங்கல் பண்டிகை ஒட்டி அதிக அளவில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, சேலம் மண்டலத்தில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் ஆகிய இரு சுங்கச்சாவடிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய 18 பேர் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை வரை 50 ஆம்னி பஸ்களில் சோதனை நடந்தது. கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வராத நிலையில், அதில் அதிக ஒலி எழுப்பியது, கண் கூசும் அளவில் முகப்பு விளக்குகளை எரியவிட்டது உள்ளிட்ட குறைகளை கண்டறிந்து ரூ.11/4 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வரும் 16-ந் தேதி வரை வாகன சோதனை நீடிக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 6 வாகனங்கள் அனுமதி ரத்து
- முதலுதவி, தீயணைப்பான் உள்ளிட்ட வசதிகளின்றி இருந்ததால் நடவடிக்கை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட ரகுநாதபுரம் கூட்ரோடு அருகில் ஆரணி மோட்டார் வாகன அலுவலகம் இயங்கி வருகினறது.
ஆரணி போளுர் செய்யார் சேத்பட் உள்ளிட்ட பகுதிகளில் 45 தனியார் பள்ளி உள்ளன. இந்த பள்ளி பஸ்களை மோட்டார் வாகன அலுவலர் சரவணன், ஆய்வாளர் முருகேன் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இதில் 353 வாகனங்களில் முதல்கட்ட மாக 230 தனியார் பள்ளி வாகனங்களில் 22 வாகனங்கள் ஆய்வு செய்தனர். முதலுதவி தீயணைப்பான் உள்ளிட்ட வசதிகளின்றி உள்ள 6 வாகனங்கள் அனுமதி ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மற்ற வாகனங்களை தொடர்ந்து மோட்டார் வாகன அலுவலர்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். தாசில்தார் மஞ்சுளா, ஆரஞ்ச் பள்ளி சேர்மன் சிவக்குமார், வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்கத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






