search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Influenza Prevention"

    • சாமளாபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.இலவசமாக மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த முகாமானது பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி தலைமையில் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி முன்னிலை வகித்தார்.மேலும் இந்த முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் டாக்டர்.காவ்யாஸ்ரீ மற்றும் மருத்துவகுழுவினர் சிகிச்சை அளித்தனர்.முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.இலவசமாக மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    ×