search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in salt"

    • உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. உரிய விலை இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • ஒரு டன் ரூ.2000-த்திற்கு மேல் விற்றால் தான் லாபம் கிடைக்கும் என உப்பள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவ தால் உப்பு உற்பத்தி அதி கரித்துள்ளது. மாவட்டத்தில் தமிழ்நாட்டு உப்பு நிறுவனம் வாலிநோக்கம் பகுதியிலும், தனியார் உப்பு உற்பத்தி நிறு வனங்கள் மூலம் திருப்புல்லாணி, தேவிபட்டினம், நதிப்பாலம், கோப்பேரிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.உப்பு உற்பத்தி காலம் வட கிழக்கு பருவமழை முடிந்த பின் மார்ச் முதல் அக் டோபர் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும்.

    உப்பளங்களில் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படும். இந்தாண்டு தென் மேற்கு பருவமழை காலங்களில் பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதி கரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி மும்முரமாக நடக்கிறது.

    ராமநாதபும் மாவட்டத்தில் ஒரு சீசனில் 2.5 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும். உப்பு உற்பத்தியில் மக்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் 29 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். தற்போது வெப்பம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தியும் அதிக ரித்திருப்பதால் உற்பத்தி யாளர்களும், உப்பள தொழிலாளர்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    தற்போது உப்பளங்களில் உப்பு மலை போல் குவிக்கப் பட்டுள்ளது. டன் உப்பு சில மாதங்களுக்கு முன் வரை டன் ரூ.2500 முதல் ரூ.3000 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு டன் உப்பு ரூ 1200 முதல் ரூ 1600 வரை விற்பனை ஆகிறது. தற்போதுள்ள விலைவாசி மற்றும் கூலி ஆட்களின் சம்பளம் உயர்வு உள்ளிட்ட வைகளுடன் ஒப்பிடுகையில் இந்த விலை போதுமானதாக இல்லை. ஒரு டன் ரூ.2000-த்திற்கு மேல் விற்றால் தான் லாபம் கிடைக்கும் என உப்பள உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    சீசன் முடிய சில மாதங்களே உள்ள நிலை யில் உப்பளங்களில் தொழி லாளர்கள் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையிலும் உப்பின் விலை யில் சரிவு ஏற்பட்டுள்ளது உரிமையாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது.

    ×