என் மலர்
நீங்கள் தேடியது "in violation of the rules"
- விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
ஈரோடு:
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சித்தோடு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஈரோடு- சக்தி ரோடு, சித்தோடு ஸ்டேட் பேங்க் பின்புறம் ஒரு வாலிபர் இரவு 10.30 மணி அளவில் விதிமுறைகளை மீறி சரவெடி பட்டாசை வெடித்து கொண்டிருந்தார்.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.






