search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த வாலிபர் மீது வழக்கு பதிவு
    X

    விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த வாலிபர் மீது வழக்கு பதிவு

    • விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சித்தோடு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஈரோடு- சக்தி ரோடு, சித்தோடு ஸ்டேட் பேங்க் பின்புறம் ஒரு வாலிபர் இரவு 10.30 மணி அளவில் விதிமுறைகளை மீறி சரவெடி பட்டாசை வெடித்து கொண்டிருந்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

    Next Story
    ×