search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in one fell swoop"

    • ஆணும், பெண்ணும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருப்பாதிரிபுலியூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • வனிதா கட்டிடவேலைக்கு சென்று வந்தார். அப்போது கடலூர் அருகே உள்ள பில்லாலி தொட்டியை சேர்ந்த ராம தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் கூத்தப்பா க்கத்தில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை ஆணும், பெண்ணும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருப்பாதிரிபுலியூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்ட 2 பேரும் கள்ளக்கா தல்ஜோடி என்பது தெரியவந்தது. கடலூர் அருகே பல்லவ ராயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். அவரது மனைவி வனிதா. இவர்க ளுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு சேகர் இறந்து போனார். எனவே வனிதா கட்டிடவேலைக்கு சென்று வந்தார். அப்போது கடலூர் அருகே உள்ள பில்லாலி தொட்டியை சேர்ந்த ராம தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராமதாஸ் பெயிண்டராக உள்ளார்.

    இந்த பழக்கம் நாளடை வில் இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமை யில் சந்தித்துவந்தனர். இவரது தாய் பாலூரில் உள்ள காய்கறி ஆராய்ச்சி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு வனிதாவின் தாய் இறந்தார். எனவே வாரிசு அடிப்படையில் வனிதா வுக்கு காய்கறி ஆராய்ச்சி பண்ணையில் வேலை கிடைத்தது. அங்கு வேலை பார்த்ததால் ராமதாசை அடிக்கடி சந்திக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்துள்ளனர். என்றாலும் வனிதா அடிக்கடி வெளியூறுக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். உடனே உறவினர்கள் அவரை தேடினர். அப்போது அவர் பாதிரிகுப்பத்தில் இருப்பது தெரியவந்தது.

    உடனே உறவினர்கள் கண்டித்ததால் சொந்த ஊரான பல்லவராய நத்தம் கிராமத்தில் தனது மகன்களுடன் வசித்து வந்தார். இதனிடையே காய்கறி ஆராய்ச்சி நிலையத்துக்கு வனிதா வேலைக்கு செல்லவில்லை. எனவே அங்குள்ள அதிகாரிகள் வனிதாவை கேள்விகேட்டனர். இதனால் மனமுடைந்த வனிதா வீட்டை விட்டு திடீரென வெளியேறினார். உடனே உறவினர்கள் தேடினர். அப்போது வனிதா கூத்தப்பாக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் வனிதாவும், ராமதாசும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக உறவின ர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராமதாஸ் மனைவி சென்னையில் உள்ளார். அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ×